Sonntag, 21. Juni 2015


அன்பே சிவம்

அன்புக்கோர் எல்லை இல்லை

அது கடல் கடந்தும் போகும்

கரை புரண்டும் ஓடும்

கணணி வழி ஓடி காதோரம் பாடும்

கைகோர்த்து கூட நம் பக்கத்திலும் நிக்கும்

தொலை பேசி மூலம் காதல் கதை பேசும்

கடிதங்கள்  ஊடாக பல வடிவங்களை ஆக்கும்

கண் மூடும் போதும் கனவாக தொடரும்

அன்பு இல்லாத இதயம் பாலை வனமாகி போகும்

அன்பு கொண்ட இதயம் பூம்பொழிலாகி திகழும்

கண்ணுக்கு தெரியாமலே அது பல உள்ளங்களை தொடும்

அன்பு நிறைந்த உள்ளங்கள் ஆனந்தத்தில் ஆடும்

அன்பு இல்லா இல்லங்கள் துன்பத்தில் வாடும்

பணம் வந்து உலகத்தை ஆழுகின்ற போதும்

இந்த அன்பு ஒன்றே மனித மனங்களை ஆழும்

அன்பே சிவம் அன்பே சிவம்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen