Freitag, 3. Oktober 2014


ஜோடி பறவை
 

ஜோடியாக திரியும் பறவைகள்

ஜோடி மாறி போவதில்லை

வீடு தேடி அலைவதில்லை

ஏதும் இன்றியே ஒற்றுமையை

அவை மறந்து போனதும் இல்லை

காடு நோக்கி பறந்தாலும்

காதல் குறைந்து போகவில்லை

குளக் கரையில் நீந்தினாலும்

குற்றங்கள் புரிவதில்லை

ஐந்தறிவும் இல்லாத பறவைகள்

வாழும் வாழ்க்கையை

ஆறறிவு படைத்த மனிதர்

வாழ நான் காணவில்லை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen