Samstag, 13. September 2014


காதலே ஒரு படுகுளி

காதல் வந்து மோதையில்

இதயம் சுனாமி போலே பொங்கும்

உந்தன் உள்ளம் அலையோடே

அள்ளி கொண்டே போகும்

கண்ணில் தெரியா காதலாலே

உந்தன் சிந்தை குழம்பி போகும்

காதல் வைரஸ் தாக்கி உடலும்

நாளும் நலிந்து போகும்

காதல் நோயே பெரும் நோயாய்

மனித வாழ்வை முடக்கி போடும்

மண்ணில் பிறந்த மனித குலமே

காதல் வலையில் மாட்டி துடிக்கும்

கடல் மீன்கள் போலே

மாய வழியில் மாள துடிக்கும்

கர்ம வினைதான் காதலாகி

 கண்ணீர் வடிக்க வழியும் காட்டும்

உறவும் பிரிவும் உனது விதியுமாகி

உள்ளம் நொந்து போகுமே

காதலே ஒரு படுகுளி

வாழ்க்கை பாதையில் பார்த்து

நடக்க வேணும் உன் இருவிழி

உன் இரு விழி

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen