Sonntag, 24. September 2023

அவன் எங்கே?

அவன் எங்கே அவன் எங்கே?

அந்த ஆதி சிவன் எங்கே?

அடியும் முடியும் காணாது

அண்டமெல்லாம் வளர்ந்து நின்ற

அந்த ஆதி யோகி எங்கே?


உமையவளை பாதி கொண்ட

பரமசிவன் எங்கே?

பரிதவித்து மானிடர் அழுகின்ற போது

அவன் எங்கே?

 

நச்சு பாம்புகளுக்கும் அடைகலம்

 கொடுத்த ஆண்டவன்

அவணியிலே அவதியுறும் மானிடர்கு

அடைகலம் கொடுக்க மறுப்பதேன்

பாதி உடலை பார்வதிக்கு கொடுத்த சிவன்

துன்பமுறும்  பெண் இனத்தை காக்க மறப்பதும் ஏன்

கங்கை கொண்டை சடையான்

உலகை காக்க கங்கயை தந்த  சிவன்

இன்று உலகம் அழிவதை தடுக்காமல்  நிப்பதும் ஏனோ?

அவன் எங்கே அவன் எங்கே?

அந்த ஆண்டவன்தான் எங்கே?

 கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen