இன்னும் எத்தனை நாள்
நாடி தளர்ந்து நடை தளர்ந்து
இடை மெலிந்து பாடையிலே போவதற்கு
பிறப்பெடுத்த மானிடனே
கடை கடையாக ஏறினாலும்
உன் நோயும் பிணியும் தீர
மருந்துமில்லை
சாக வரம் பெற்று
நீடுழி வாழ
வழியுமில்லை
நீ மாடி கட்டி வாழ்ந்தாலும்
மடி மீது புரண்டு இன்பமுற்றாலும்
சோடி மாறி சுகம் கண்டாலும்
கடைசியிலே காடுதான்
கட்டுடலும் கலைந்து
ஆணவமும் அழிந்து
உறவுகளும் தொலைந்து
உருக்குலைந்து நீ போக
காலம் மிக விரைவில்
வரும் என்று தெரிந்தும்
பிறரை மதியாமல் குதிக்கிறாய்
அன்பை உணராமல் மிதிக்கிறாய்
எக்கதாளமாய் சிரிக்கிறாய்
நேரமின்றி பறக்கிறாய்
இன்றோ நாளையோ
இன்னும் எத்தனை நாள்
என்பதை மறக்கிறாய்
இந்த நிமிடமாவது சிந்தித்து பார்
உண்மை எது என்பதை சிந்தித்து பார்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen