Sonntag, 10. April 2022

 

வொளவால்

வொளவால் என்றாலே ஒரு அருவருப்பான பறவையாகதான்  எண்ணத் தோன்றும் காரணம் அது பக்கத்தாலே பறந்தாலே ஒரு துர் நாற்றம் எம்மை தாக்கும், வொளவால் ஒரு நாளும் வெளிச்சமான இடத்தில் வாழாது அது எங்கேயாவது இருண்ட இடம் தேடி தென்னம் வட்டுகள், குகைகள், அல்லது வீட்டு  முகட்டில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்து வீடுகளில் ஓட்டுக்கூரைகளில் இப்படிதான் அது இடம் தேடி கூட்டமாக அதுவம் தள்ளி தள்ளி தொங்காது ஒன்றோடு ஒன்று இடிச்சுக்கொண்டுதான் தலை கீழாக தொங்கும்,  கீச் கீச் என்று சத்தம் வேறே போடும் பகலில் நடமாடாது இரவிலைதான் இதுகள் சுத்தி பறந்து இரை தேடும்


இதுகள் தொங்கற இடத்தில் நாற்றமும் பிணியும்தான் குடி புகும்.

தொங்கும்.வொளவால்களை பாவம் செய்து செத்தவர்கள்தான் தண்டனை கிடைத்து வொளவாலாக வந்து தலை கீழாக தொங்குவதாக   ஊரிலை சொல்ல கேட்டதுண்டு, மேலை நாடுகளில் வொளவால்களை ஆவிகளாகதான், அதாவது வம்பியர் என்று நம்புகிறார்கள்.

அது பற்றி எத்தனை கொர பிலிம் எல்லாம் வந்துட்டுது, வொளவாலாக பறந்து பின் பேயாக போய் ஆட்களின் கழுத்தை கடித்து இரத்தம் உறிஞ்சும் பேய்கள் பகலில் மீண்டும் வொளவாலாக தொங்குவதாக அந்த படங்களில் சித்தரிக்கபட்டுள்ளது

 அந்த வம்பியர்கடித்தால் கடி வாங்கினவர்களும்  பின் பேய்களாக மாறி விடுவார்கள் என்பது அமெரிக்கர்களின் நம்பிக்கை! இது கொர பிலிம்மில் இப்படி காட்ட படுகிறது. எதுவோ வொளவால்களை இறந்த ஆட்களாகதான் பொதுவாக தமிழரும் சரி மேலை நாட்டவரும் சரி சொல்கிறார்கள் ஆனால் அந்த வொளவாலை பிடித்து சாப்பிடும் மனிர்களை என்னவென்று சொல்லலாம்?

இந்த நாத்தம் பிடிச்ச வொளவாலை சாப்பிடுறவங்களும் ஒரு நாத்தம் பிடித்த சமுதாயமாகதான் இருக்கும். சரி எங்கேயோ யாரோ சாப்பிடுறாங்கள் என்று நாம விட்டு வைத்தாலும் நம்மை இப்ப அந்த வொளவால் விடுவதாக இல்லையே!

வொளவால்லிருந்துதான் கொரானோ வைரஸ் மிருகங்களுக்கு போய் பின் மனிதர்களுக்கு பரவியதாக இன்று ஒரு சேதி உக்கிரமாக பரவுது அப்படியானால் அந்த வொளவாலை அது தாக்கவில்லையே!

வொளவாலை விரும்பி உணவாக சாப்பிடும் ஆபிரிக்கா நாடுகளிலும் இந்த நோய் அதிகமாக பரவவில்லையே!

அன்று எங்க ஊரிலும் சிலர் பெரிய வொளவாலை பிடித்து சாப்பிட்டதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன் அப்ப ஒன்றுமே  அவர்களுக்கு நடக்காத போது இப்ப மட்டும் இந் கொரோனா எப்படி வொளவாலுக்கு வந்தது?

 இன்று மனிதருக்கு பெரும் அழிவை உண்டாக்குது? இதை நம்ப கூடியதாக இல்லையே!

வொளவால் குட்டி போட்டு பால் கொடுத்து வளர்பதாக சொல்ல படுகிறது அது குட்டியை எப்படி போடுது குட்டி வெளியே வரும் போதும் விழாமல் எப்படி தொங்குது எல்லாமே ஒரு அதிசயம்தான் தலை கீழாக தொங்கும் வொளவாலும் வாழுது ஆனால் இன்று மனிதர்களால் வாழ முடியாமல் போனதுக்கு அந்த வொளவால் காரணமானதும் ஒரு அதிசயம்தான்!

வொளவாலை போலே வாழுகிற மனிதர்களும் உண்டு பாருங்க!

ஊரிலைதான் சில பேருக்கு வேலை வெட்டியில்லாமல் கஸ்டத்தின் நிமித்தம் பத்தாத இடத்தில் வளந்த பிள்ளைகளும் தாய் தகப்பன் இன்னும் பேரன் பேத்தி வரை ஒரு வீட்டில் கிடந்து குமைவதும் வறுமையின் எடுத்துக்காட்டு எனில் இங்கு வந்த சிலரும் அப்படிதான் வாழுகிறார்கள்

இங்கு வேலை இல்லாட்டியும் அரசாங்க உதவியும் குறைந்தது தனி ஒரு ஆளுக்கு 350 ஒயிரோ வாடகையும் கொடுத்து வீடு வசதிகளும் கொடுக்கும் போதும் சிலர் பத்தாத வீடுகளில் வளர்ந்த பிள்ளைகளும்  சேர்ந்து நெருகடியாக வொளவால்களை போலே இடிபட்டு வாழும் நிலையை பார்க்கும் போது இவர்களுக்கும் அந்த வொளவாலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை பாருங்கோ!

முப்பது வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளும்  தனித்து வாழ முடியாமே,  தன் காலில் நிக்க  தெரியாமே பெற்றவர்களுக்கு தொல்லையாக கூட இருபதும்,

பிள்ளைகளுக்கு ஒரு வசதியான தனி இடம் தேவை என நினைகாத பெற்றவரும்   இந்த வொளவால்களை போலேதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள், வசதி வாய்ப்பு இல்லையென்றால் வேறே கதை ஆனால் இங்குதான் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்க படுகிறதே!

வேலை செய்கிறவர்கள் வளர்ந்த பிள்ளைகள் தனிதனியே வீடு எடுத்து போனால் காசு மிச்சம் பிடிக்க ஏலாது என்று சொல்லி அவர்கள் உழைக்கும் காசையும் வேண்டி பூட்டி போட்டு இப்படி நெரிச்சலாக வாழுவதும் உண்டு

வேலையில்லாதவர்களும்  தனிய போனால் வீடு எடுக்கலாம் அரசாங்கம் உதவி செய்கிறது ஆனாலும் சிலருக்கு தனித்து வாழ பயம் அல்லது இருக்கிற வீட்டை விட்டு போட்டு வசதியான வீடு எடுக்க பயம் இப்படியே பயந்து பயந்து தலை கீழாக தொங்கும் வொளவால்களை போலே தொங்கும் வாழ்க்கையில்  சுகாதார இன்மையால் நோயும் பிணியும் வந்து

கடைசியாக இருந்த கதிரையை விட்டு எழும்ப முடியாத நிலையில் சிலர் வாழ்க்கை போகுது

வொளவால்கள் தொங்கும் இடத்தில் சிணி நாத்தம் அடிபது போலேதான் இப்படிபட்ட மனிதர்கள் வாழும் வீடுகளும்  துர் நாற்றம் இருக்கும்

காற்றுள்ள போதே தூற்றி கொள், வாழும் போதே வசதியை தேடி கொள், கைகால் எலாமல் போன பின் எதுவும் சரிபடுத்த முடியாது பாருங்க!

நெருக்கடியான வீடுகளில் வாழுகிறவர்களுக்கு உடம்புக்கு முடியாமை போய் பராமரிக்க ஆழு உதவி கிடைத்தால் கூட அவர்கள் வந்து வீடு துப்பரவாக்கவோ அவர்களை கழுவி துடைக்கவோ வீடும் பாத ரூமும் வசதியாக இருபது அவசியம்

இல்லையெல் அரசாங்கமாக இவர்களை வயோதிப மடத்துக்கு கொண்டு போய் விட்டு விடும்  இதுதாங்க உண்மை!

அவனவன் வாழ்க்கை அவன் கையில் அது எப்படி என்பது அவரவர் தீர்மானிக்க வேண்டியது  காற்றோட்டமாய் வசதியாய் வாழ ஊரிலை எல்லாருக்கும் வசதி இல்லாது போனாலும் வெறும் காணியிலிருந்து ஐன்னலை திறந்தால் காற்றாச்சும் உள்ளே வரும் இங்கு நாமாகதான் வசதியை உருவாக்க வேணும். ஆனால் வொளவால்களை போலே ஒட்டி உரசி கொண்டு இருண்ட இடத்தில் வாழ நினைக்கும் சில மனிதர்களை நாம் என்ன சொன்னாலும் திருத்தவே முடியாது

அதிலும் நம்ம சனம்தான் வெளிநாடு வந்து இப்படி வாழுகிறார்கள்  பத்தாத இடங்களில்  வொளவால்களை போலே  சிலரது வாழ்க்கை! காசை மட்டும் சேர்த்து என்ன பயன் இன்று கொரோனா பிடித்தால் நாளை பாடையில் பாடை கூட இங்கு இல்லை, மரண சடங்கும் இல்லை  இதுதான் இன்றைய நிலமை!

வொளவாலும் சரி வொளவாலை போலே வாழும் மனிதர்களும் சரி மற்றவர்களுக்கு  ஒரு அருவருக்க தக்க மாதிரிதான் தோணுகிறார்கள்

நாய் வாலை நிமித்த முடியாதப்பா! அடுதவனை திருத்த நம்மாலே முடியாதப்பா!

Keine Kommentare:

Kommentar veröffentlichen