நாதியற்று போகாமல்
மண் குதிரையை நம்பி
ஆற்றில் இறங்கினால்
நட்டாற்றில் உயிர் போகும்
பாதி குருடனை கை பற்றி
போனதாலே
பாதியிலே வாழ்க்கை
முடிஞ்சு போச்சுது
நீதி நியாயம் பார்த்து வாழ்ந்தால்
நெஞ்சில் நின்மதி அற்று போகுது
சாதி சனம் பார்காமே பழகி பார்த்தாலும்
பிறவியிலே உள்ள குணம்தான்
கடைசி வரை நிக்குது?
ஆதி மனிதனை போலே
வாழ்ந்துவிட்டால்
நோயுமில்லை பிணியும் இல்லை
அகதிகளும்தான் இல்லை
நீ பாதி நான் பாதி என்று
வாதித்து வாதித்து
வாக்கு வாதங்களும்
கூடி
குற்றவாளி யாரு பிரதிவாதி
யாரு என்று அறியாமல் போகுது
மீதி காலம் போவது எப்படியோ?
சேதி கேட்டு ஓடி வர உறவும்
இல்லை என்றால்
நாதியற்று போகாமல்
பாதிமதி சூடிய ஆதி சிவன்
தாழ் பணிந்து அவன் கதியாய்
வாழ்ந்திடுவோமே!
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen