Samstag, 22. April 2017

முத்தம் 

பனி துளி இட்ட முத்தம்
மலரின் இதழில் பதிகிறது
ஆதவன் இட்ட ஏழு முத்தம்
வானவில்லாய் வானில் தெரிகிறது
மழை துளி தந்த முத்தங்கள்
மண்ணில் செடியாய் முளைத்து நிற்கும்

கொஞ்சும் கிளிகள் தரும் முத்தம்
காண்பவர் மனதை கவர்ந்திழுக்கும்
கடல் அலைகள் வந்து தரும் முத்தம்
கரையை மோதி அதிர வைக்கும்
இயற்கையில் கூட முத்தங்கள்
காதலில் எங்கும் யுத்தங்கள்

பெற்றவள் தருவாள் முதல் முத்தம்
அதில்தான் கடவுளின் கருணை
கலந்திருக்கும்
பிள்ளையின் முத்தம்தான் இனிய முத்தம்
காமம் இல்லாத ஒரு முத்தம்
உண்மை அன்பை உணர்த்தும் முத்தம்
அது தாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம்
மகன் தாய்க்கு கொடுக்கும் முத்தமுமே!

காதலின் பின்னே காம முத்தம்
அது கருவாய் பின்பு உயிர்த்து நிற்கும்
சத்தமில்லாத முத்தங்கள் இட்ட போதும்
சத்தமிடும் மதளையாய் அது வந்து தவழும்
முத்தங்கள் ஆயிரம் கொடுத்தாலும்
முத்தாக ஒரு பிள்ளை வந்து சொத்தாக எமக்கு
நிற்கும் வேளை அதுவே ஆண்டவனின் அருள் முத்தம்
எம் வாழ்வில் ஆண்டவன் தரும் அருள் முத்தம்

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen