மனிதன் மடிந்தால்
காய்ந்த
மரமும் விறகாகுது
கருகிய
சருகும் பசளையாகுது
அறுத்த
புல்லும் வைக்கோல் ஆகுது
உதிர்ந்த
பூக்களும் வாசனை திரவியமாகுது
வெடிச்ச
பருத்தியும் பஞ்சாகுது
விழுந்த
பழங்களும் விதையாகுது
செத்த மீனும் கருவாடாகுது
உடைந்த
முட்டையும் ஒம்லெட் ஆகுது
வெட்டிய
ஆடும் பிரியாணியாகுது
மனிதன்
மடிந்தால் யாருக்கு லாபம்
இறந்த பின்பும் வெறும் தொல்லையாகிறான்
எழுதா காணிக்காக சொத்துக்காக
இருப்பவரை
கூட அடிபட வைத்தே
சாகடிக்கிறான்
இதுதான்
உண்மை
உணர வேண்டிய உண்மை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen