Samstag, 28. Mai 2016

மனிதன் மடிந்தால்


காய்ந்த மரமும் விறகாகுது
கருகிய சருகும் பசளையாகுது
அறுத்த புல்லும் வைக்கோல் ஆகுது
உதிர்ந்த பூக்களும் வாசனை திரவியமாகுது
வெடிச்ச பருத்தியும் பஞ்சாகுது
விழுந்த பழங்களும் விதையாகுது

செத்த மீனும் கருவாடாகுது
உடைந்த முட்டையும் ஒம்லெட் ஆகுது
வெட்டிய ஆடும் பிரியாணியாகுது
மனிதன் மடிந்தால் யாருக்கு லாபம்
இறந்த பின்பும் வெறும் தொல்லையாகிறான்
எழுதா காணிக்காக சொத்துக்காக
இருப்பவரை கூட அடிபட  வைத்தே சாகடிக்கிறான்
இதுதான் உண்மை
உணர வேண்டிய உண்மை

கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen