Samstag, 17. Oktober 2015

இரண்டு வரி கவிதைகள்
 
என் கை பிடித்து நீ நடந்தாய் நடை பயில அன்று
உன்  கை பிடித்து நான் நடக்கின்றேன் முதுமையிலே இன்று
மகனே நீயே என் துணை
கவி மீனா
விதை மண்ணில் விழுந்தால் அதன் முளை நிலத்தை கிளித்து எழும்
மனிதன் மண்ணில் சாய்ந்தால் அவனது புகழ் விழித்து எழும்
கவி மீனா
குழந்தையில் அனாதைகள் குப்பை தொட்டியிலே
முதுமையில் அனாதைகள் அனாதை விடுதியிலே
கவி மீனா
காயங்கள் ஆற காலங்கள் போதும்
மனக்காயங்கள் ஆற யுகங்கள் வேணும்
கவி மீனா
நாம் இருக்கும் வரைதான் எமக்கு கொண்டாட்டம்
நாம் இல்லையென்றால் அடுத்தவனுக்குதான் கொண்டாட்டம்
கவி மீனா

Keine Kommentare:

Kommentar veröffentlichen