இரண்டு
வரி கவிதைகள்
என் கை
பிடித்து நீ நடந்தாய் நடை பயில அன்று
உன் கை பிடித்து நான் நடக்கின்றேன் முதுமையிலே இன்று
மகனே
நீயே என் துணை
கவி மீனா
விதை
மண்ணில் விழுந்தால் அதன் முளை நிலத்தை கிளித்து எழும்
மனிதன்
மண்ணில் சாய்ந்தால் அவனது புகழ் விழித்து எழும்
கவி மீனா
குழந்தையில்
அனாதைகள் குப்பை தொட்டியிலே
முதுமையில்
அனாதைகள் அனாதை விடுதியிலே
கவி மீனா
காயங்கள்
ஆற காலங்கள் போதும்
மனக்காயங்கள்
ஆற யுகங்கள் வேணும்
கவி மீனா
நாம்
இருக்கும் வரைதான் எமக்கு கொண்டாட்டம்
நாம்
இல்லையென்றால் அடுத்தவனுக்குதான் கொண்டாட்டம்
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen