Sonntag, 29. September 2013


கோடிகள்
 

கோடி பணத்தில் புரண்ட போதும்

நின்மதியின்றி அலையும் மனிதர்கள்தான்

எத்தனை பேரு?

பல கோடியை தேடி போய்

தெரு கோடியில் நின்றவர்கள் எத்தனை பேரு?

கோடி கோடியாய் கொட்டி கொடுத்தும்

திருமண வாழ்வில் கோடி இன்பம் காணாதவர்கள்தான்

எத்தனை பேரு?

உலகிலுள்ள கோடி சனத்தில் நல்ல மனசை தேடி

ஒரு மனிதனையும் காணாதவர்கள்தான் எத்தனை பேரு?

நாடு இருந்தும் வீடு இருந்தும் நமக்கு என்று

ஒரு வீட்டு கோடி கூட இல்லாமல் அலையும் தமிழர்கள்

தான் எத்தனை பேரு?

வருசம் பொங்கல் தீபாவழி என்று பல பல விழாக்கள்

வந்த போதும் ஒரு கோடி துணி உடுக்க

வழியின்றி வாடும் மனிதர்கள் எத்தனை பேரு?

இன்பம் கோடி துன்பம் கோடி எல்லாம் நாடி

மானிட வாழ்வில் யாவும் ஓடி

மறைவதுதானே நீர்குமிழி வாழ்க்கை

நீர் குமிழி வாழ்கை

கவி மீனா

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen