இருண்ட வானில்
பொங்கலை பொங்கி இருண்ட வானில்
ஆதவனை தேடுகிறோம்
மூடிய முகில் கூட்டத்திலே
சூரியனை தேடுகின்றோம்
நோயும் நொடியும் பொங்கி வழியும்
போதினிலும் நின்மதியை தேடுகின்றோம்
காமம் குரோதம் சுயநலம் என வாழும் உலகில்
உண்மை அன்பை தேடுகிறோம்
துரோகம் செய்யும் மனிதருக்குள்
நல்ல மனசுகளை தேடுகிறோம்
நாடுகள் போடும் சண்டைக்குள்
அமைதியை நாமும் தேடுகிறோம்
தேடி தேடி அலைவதிலே காலமும்
போகுது கடுகதியில்
மறைவில் நிக்கும் ஆதவனும்
மனதில் நிக்கும் ஆண்டவனும்
வந்தால் ஒழிய வழியில்லை
வாழ்க்கையில் எதுவும் சரியில்லை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen