மார்கழி மாதம்
தூரலோடு காற்று வந்து
முகத்தில் உரசி செல்லுதே!
பனி புகாரினுடே தூரத்து
வெளிச்சம் மின்னி
மின்னி தெரியுதே!
சில்லென்று குளிரில்
தேகம் சிலு சிலிர்த்து நிக்குதே!
மாரி மாத குளிர் இங்கே
என் மனதை வாட்டி செல்லுதே!
திரு வெம்பா பாடல் ஓசை
இன்னும் என் காதில் வந்து ஒலிக்குதே!
ஊரில் வாழ்ந்த நினைவுகள்
இன்னும் நெஞ்சில் சக்கரை புட்டு
போலே இனிக்குதே!
மார்கழி மாத பனி மூட்டம்
கண்ணை மூட வைத்து
சிந்தனையில் ஆழ்த்துதே!
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen