மண்ணுக்கே பாரமாய்
பள்ளி காலத்தே படிக்க
மனமில்லாமல்
இளமை இருக்கும் போது
உழைக்காமல்
தன் சொந்த காலில்
வாழ
முடியாமல்
அடுத்தவனை நம்பி
வாழ்பவனுக்கு
சோறு போடுவதும் உதவி
பண்ணுவதும்
புத்திலிருக்கும் பாம்புக்கு
பால் ஊத்துவது போலதான்
ஊனமுற்றோருக்கு உதவுங்கள்
அனாதை குழந்தைகளுக்கு உதவுங்கள்
முதியோருக்கும் வயோதிப
பெற்றோருக்கும்
உதவுங்கள் ஆனால்
ஒரு
நாளும்
சோம்பேறிகளுக்கும் திண்ணைக்கு
மண் எடுக்கும் உதவாக்கரைகளுக்கும்
உதவாதீர்கள்!
மிரட்டி அடுத்தவன்
சொத்தை
பறிப்பவனுக்கும்
பயந்து தானம் பண்ணாதீர்கள்
இவர்கள் பெற்றவருக்கும்
உற்றவருக்கும் பாரமாய்
இந்த மண்ணுக்கே பாரமாய்
வாழும் ஈன பிறவிகளே!
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen