Sonntag, 5. Juni 2016

சை சை
 
 
டங் டங் என்று ஒரு ஓசை
அது மழை துளி பேசும் ஒரு பாசை
இது நம் காதில் கேட்கும்  இசை
இயற்கை சொல்லும் அதன் மனசை
அதை கொண்டு வருவது காற்றின் விசை
 
 
 
 
 
சிலர் பேச்சோ ஒட்டும் பிலாக்காய் பசை
நாள் பூராய் போடும் சிலரது வாய் அசை
அழிவை தேடி தருவதே நம் ஆசை
றொட்டிக்கு மாவை கையாலே பிசை
 
 ஒருவர் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடினால் எசை
குற்றம் புரிந்தால் அன்று கிடைக்கும் அடி கசை
பேயாக அலையாதே நாளும் எண்ணி காசை
அழித்து விடு உன் உள்ளத்திலுள்ள மாசை
கவி மீனா
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen