சை
சை
டங் டங் என்று ஒரு
ஓசை
அது மழை துளி பேசும்
ஒரு பாசை
இது நம் காதில் கேட்கும் இசை
இயற்கை
சொல்லும் அதன் மனசை
அதை கொண்டு வருவது காற்றின்
விசை
சிலர் பேச்சோ ஒட்டும்
பிலாக்காய் பசை
நாள் பூராய் போடும்
சிலரது வாய் அசை
அழிவை தேடி தருவதே
நம் ஆசை
றொட்டிக்கு மாவை
கையாலே பிசை
ஒருவர் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடினால் எசை
குற்றம் புரிந்தால்
அன்று கிடைக்கும் அடி கசை
பேயாக அலையாதே
நாளும் எண்ணி காசை
அழித்து விடு உன்
உள்ளத்திலுள்ள மாசை
கவி மீனா
Keine Kommentare:
Kommentar veröffentlichen