வாழ்க்கை
மூச்சு மட்டும்
இருந்து விட்டால்
அது வாழ்க்கை
இல்லை பாருடா
வயிறு முட்ட
உண்டு விட்டால் அதுவும்
வாழ்க்கை
இல்லை கேளடா
உன்னை சுற்றி
ஆட்கள் இருந்தால் அதுவும்
வாழ்க்கை இல்லை
நினையடா
உள்ளத்திலே அமைதி
இருந்தால் சொல்லடா
மனம் நிறைந்த
வாழ்க்கை அதுவே
யோசிச்சு பாரடா
கவி மீனா